
மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு பயணித்த ரயில் தடம் புரண்டு விபத்து
கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை ரயில் ஒன்று ரயில் தடம்புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கிப் பயணித்த ரயில் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டது.
தடம்புரண்ட ரயிலை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்