யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராகியுள்ளார்.
சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கதிர்காமத்தில் உள்ள காணியின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் தனியாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.