
யுக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தை லண்டனில்
யுக்ரைனுக்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான போர் நிறுத்தத்தை உறுதி செய்யும் நோக்கில் இன்றைய தினம் புதன் கிழமை லண்டனில் புதிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.
இதில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, யுக்ரைன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இராஜதந்திரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறிப்பிடத்தக்க சலுகைகளுக்கு ஈடாக ரஷ்யா தனது படையெடுப்பை நிறுத்தத் தயாராக இருக்கலாம் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விசேட தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் லண்டன் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவர்கள் பங்கேற்கவில்லை.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் அதிகரித்து வருகின்ற போதிலும், தெளிவான தீர்மானங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்