யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு

-யாழ் நிருபர்-

நாட்டை தூய்மைப்படுத்தும் நோக்குடன் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமானது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழான பொலிஸ் குழுவினரால் இன்றையதினம் திங்கட்கிழமை சுன்னாகம் நகரப் பகுதியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, தலைக்கவசம் இன்றி வாகனம் செலுத்துபவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

மேலும் வீதியோரங்களில் இடம்பெறும் சட்டரீதியற்ற நடமாடும் வியாபாரங்கள் செய்பவர்கள், வாகனங்களில் தேவையற்ற அலங்கரிப்பு செய்பவர்கள், வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை வீதியில் காட்சிப்படுத்துபவர்கள் உட்பட பலருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு அவற்றை சீர் செய்யுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்