யாழில் கரையொதுங்கியுள்ள மர்ம வீடு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு-நாகர்கோவில் பகுதியில், இன்று புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது.

அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களினால், கடல் சீற்றங்கள், புயல், நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது.

மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா போன்ற ஏதாவது ஒரு நாட்டில் இருந்து இவ்வாறான பொருட்கள் கடலில் மிதந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை பிரதிபலிக்கும் பல மரபு அம்சங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தககது.

Minnal24 FM