
மோட்டார் சைக்கிள் மோதி வயோதிப பெண் உயிரிழப்பு
-யாழ் நிருபர்-
யாழ்பாணத்தில் வீதியை கடக்க முட்பட்ட போது மோட்டார் சைக்கிள் மோதி வயோதிப பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலன் இன்றி நேற்று சனிக்கிழமை பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த நாகராஜா இராஜபூவதி (வயது – 68) என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கடந்த வியாழக்கிழமை கோப்பாய் தெற்கு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காகm பருத்தித்துறை வீதியை குறுக்கே கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பிற்பகல் உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்