முள்ளிவாய்க்காலில் கரை ஒதுங்கிய படகு

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 102 பயணிகளுடன் பயணித்த நாட்டு படகு ஒன்று இன்று வியாழக்கிழமை  கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரிலிருந்து 35  சிறுவர்கள் உள்ளடங்கலாக 102 பயணிகளுடன் பயணித்த நாட்டு படகு ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.

குறித்த படகில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியுள்ளனர், அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களை நேரில் சென்று முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கடற்படையினர் பார்வையிட்டு நிலமைகள் தொடர்பில் அறிவித்துள்ளனர்.

திருகோணமலையில் இருந்து கடற்படை படகு ஒன்று வருகைதந்து அவர்களை அங்கு மீட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்