
முல்லைத்தீவில் புதையல் தோண்டிய 5 பேர் கைது
முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் நேற்று வியாழக்கிழமை புதையல் தோண்டிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு சிறப்புப் படை முகாமின் என்.சி.பி. என்.சி.எஸ். விஜேரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவால் இவர்கள் கைது செய்யப்பட்டு கொக்கிளாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் இராணுவ பொறியியலாளர் படையின் ஓய்வுபெற்ற கெப்டன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.