முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பம்

அனைத்து அரச பாடசாலைகளும் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக  இன்று திங்கட்கிழமை  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு மணிநேரம் நீடிக்கும் முடிவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான புதிய தவணையின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில், பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலமாக ஒரு மணிநேர நீடிக்கும் முடிவு இடைநிறுத்தம் நீடிப்பதற்கு கல்வி அமைச்சு முன்னர் தீர்மானம் எடுத்திருந்தது.

இந்த ஆண்டுடன் தொடர்புடைய பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139 நாட்கள் வரையறுக்கப்பட்ட கால அவகாசம் காணப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் வரை நீடிப்பதன் மூலம் கற்பித்தலுக்கான காலத்தை கூடுதலாக வழங்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும், கால அவகாசம் நீடிக்கப்பட்ட பின்னரும் பாடத்திட்டத்தை உள்ளடக்க முடியாத பட்சத்தில், மூன்றாம் தவணையின் போது, சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்துவது குறித்தும் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியிருந்தது.

எனினும், குறித்த தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Minnal24 வானொலி