மியன்மார் படகின் மாலுமிகளுக்கு விளக்கமறியல் : ஏனையோர் மிரிஹானை தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைப்பு!

முல்லைத்தீவில் 103 மியன்மார் அகதிகளுடன், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த படகின் மாலுமிகள், எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

மேலும் படகிலிருந்து மீட்கப்பட்ட அகதிகள் மிரிஹானை தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட மியன்மார் அகதிகளுடன் பயணித்த மீன்பிடி படகொன்று, முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பகுதியை, நேற்று வியாழக்கிழமை வந்தடைந்தது.

கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட மியன்மார் அகதிகள், இன்று வெள்ளிக்கிழமை காலை திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்

இந்நிலையில், அவர்கள் தற்போது மிரிஹானை தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.