மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள் இறக்குமதி : விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கம்!

புத்தம் புதிய மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நாயகத்திடமிருந்து அனுமதி பெறப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்கி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் சில வாகனங்கள் மீதான இறக்குமதி தடையை தளர்த்தி நிதியமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்பில் வெளியாகியுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, முன்னர் நிலவிய தடையின் காரணமாக துறைமுகங்களில் தேங்கியுள்ள வாகனங்களை விடுவிப்பதற்கு வழிசமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையிலான இந்த வர்த்தமானியின் கீழ், வேறு நாடுகளில் பதிவு செய்யப்படாத புதிய மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.