மாதத்தின் முதல் வாரத்தில் 33,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தியா, பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜேர்மனி, பங்களாதேஷ் மற்றும் ரஷ்யாவிலிருந்து அதிகளவான பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 930,794 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.