மாணவியிடம் ஆபாச உரையாடலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது!

திவுலபிட்டிய பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவியிடம் கையடக்க தொலைபேசியின் மூலம் ஆபாச உரையாடலில் ஈடுபட்டு ஏமாற்றியதாகக் கூறப்படும் பாடசாலை ஆசிரியரை திவுலபிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர் .

குறித்த சிறுமியின் உறவினர் ஒருவரால் மினுவாங்கொட பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திவுலபிட்டிய பகுதியில் உள்ள பாடசாலையின் விஞ்ஞான பாட ஆசிரியர் மீதே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியர் பாடசாலையின் 11 ஆம் வகுப்பு மாணவியுடன் கையடக்கத் தொலைபேசி மூலம் பல்வேறு ஆபாச உரையாடல்களில் ஈடுபட்டதாகவும், கையடக்கத் தொலைபேசியில் மாணவியின் நிர்வாண புகைப்படங்களைப் பார்த்ததாகவும், மாணவியின் உறவினர் ஒருவர் மினுவாங்கொட பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை இறந்துவிட்டதாகவும் , தாய் வெளிநாட்டில் பணிபுரிபவர் என்றும் மேலும் சிறுமி தனது உறவினரின் பாதுகாவலில் இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

மாணவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்ததன் காரணமாக அவருடைய உறவினர் மாணவியின் கையடக்க தொலைபேசியை சோதனையிட்டுள்ளார்.

இதன் போது ஆசிரியர் சிறுமியை ஏமாற்றி சிறுமியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பார்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த ஆசிரியர் பல சந்தர்ப்பங்களில் அம்மாணவிக்கு பணம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .

சந்தேகத்திற்குரிய ஆசிரியர் மீது இதற்கு முன்பும் இதே போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அந்த பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார் .

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்