முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் இல்லத்திற்கு இன்று புதன்கிழமை சென்று அவரது நலம் விசாரித்ததுடன் தமிழ்த் தேசியப் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடினார்.
இந்த விஜயத்தின் போது வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரச்சினைகளை முன்வைத்த சம்பந்தன், வடக்கு கிழக்குப் பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்தார்.
- Advertisement -
வடக்கு கிழக்கு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி இணக்கமான தீர்வை எட்டுவதற்கு முயற்சிப்பதாக ராஜபக்ச சம்பந்தனிடம் உறுதியளித்தார்.
தமிழ்க் கட்சிகளின் கவலைகள் குறித்து விவாதிக்க விரைவில் நடைபெறவுள்ள மூன்று நாள் அனைத்துக் கட்சி மாநாட்டில் தனது கட்சியான கலந்துகொள்ளும் என்றும், அதன்பின் அதன் முன்மொழிவுகளை நேர்மறையான முறையில் ஆய்வு செய்யும் என்றும் ராஜபக்ச தெரிவித்தார்.
- Advertisement -