
மரம் முறிந்து வீழ்ந்ததில் வீடுகளுக்கு பலத்த சேதம்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் கனமழையுடன் கூடிய பலத்த காற்று வீசிய நிலையில் நேற்று புதன் கிழமை வீடுகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
பலத்த காற்று காரணமாக தென்னை மரம் முறிந்து வீட்டின் மீது வீழ்ந்ததில் வீட்டு கூரை உள்ளிட்ட வீட்டு உபகரணங்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அன்றாட வாழ்வாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்