
மனைவியின் சடலத்தை குளிர்சாதனபெட்டியில் வைத்த கணவன்
இந்தியாவில் உயிரிழந்த மனைவியின் உடலை கணவர் வீட்டின் குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ராவே மாவட்டத்தின் கோட்வாலி பகுதியைச் சேர்ந்தவர் பரத் மிஸ்ரா என்பவரே தனது மனைவி சுமித்ரியின் (வயது – 40) உடலை இவ்வாறு குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார்.
சுமித்ரி கடந்த ஜூன் 30ஆம் திகதி உயிரிழந்த நிலையில், இந்த மரணத்தை கணவர் ரகசியமாக சில நாட்கள் மறைத்து வந்துள்ளார். இந்நிலையில், சுமித்ரியின் சகோதரர் அபத் திவாரிக்கு சந்தேகம் ஏற்படவே பொலிஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
குறித்த புகாரின் அடிப்படையில் பரத் திவாரி வீட்டிற்கு வந்த பொலிஸார் நடத்திய சோதனையில் பெண்ணின் உடல் குளிர்சாதன பெட்டியில் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து உடலை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகார் வழங்கிய அபய், மாப்பிள்ளை தாக்கியதில் தான் சகோதரி மரணமடைந்ததாக பொலிஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மனைவி மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்ததாகவும் தனது மகன் மும்பையில் வேலை பார்த்து வருவதாகவும், இறுதி சடங்கிற்கு மகன் வரவேண்டும் என்பதற்காவே உடலை குளிர்சாதனபெட்டியில் வைத்து பாதுகாத்தேன் என்ற வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரேத பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. முடிவில் பெண்ணின் மரணத்திற்கான காரணம் வெளியான பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்