
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால், குளங்களின் நீர் அதிகரித்ததை அடுத்து, நவகிரி குளத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது.
மண்டூர்-வெல்லாவெளி பிரதான வீதியை வெள்ள நீர் ஊடறுத்து செல்வதனால், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு வெள்ள நீர் ஊடறுத்து செல்வதனால், பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், அரச ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
தற்போது பாடசாலை மாணவர்களுக்கு 3 ம் தவணை பரீட்சை நடைபெறுவதனால், வேத்துச்சேனை, மண்டூர் பிரதேசங்களிலிருந்து, வெல்லாவெளி பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் சிரமப்பட்டு பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
எனவே, இவ்வாறு ஒவ்வொரு வருடமும் ஏற்படும் வெள்ள அனர்த்தம் காரணமாக தாம் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு நிலையான பாலம் ஒன்றை அமைத்து தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.