மட்டக்களப்பு-மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தினால் 90 இலட்சம் பெறுமதியான நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு

 

-களுவாஞ்சிக்குடி நிருபர்-

மட்டக்களப்பு- மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் ஏற்பாட்டில், 90 இலட்சம் பெறுமதியான வெள்ள நிவாரணப்பொதிகள், 2700 குடும்பங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை, ஆலய முன்றலில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு போரதீவு பற்று பிரதேச செயலாளர் மேற்பார்வையின் கீழ், மண்டூர் -1,2,3, மண்டூர் தெற்கு, கோட்டமுனை, பாலமுனை, தம்பலவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள 2700 குடும்பங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மண்டூர் பிரதேசம் முழுவதும் மிக மோசமான நிலையில் பாதிக்கக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்