மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஏப்ரல் 21 உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை தேவாலயத்தின் முன்னால் இடம்பெற்றது.

அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சியின் தலைவர் சிவதர்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் குண்டுவெடிப்பில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு காலை 9.05 தேவாலயத்தின் முன்பகுதியில் உயிரிழந்தவர்களின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது குறித்த பகுதியில் பாதுக்காப்பு கடமையில் பொலிஸார், விமானப்படையினர் ஈடுபட்டதுடன் இந்த தற்கொலை குண்டு தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 80 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • Beta

Beta feature

  • Beta

Beta feature

  • Beta

Beta feature