மட்டக்களப்பு, கோட்டைமுனை ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய இரதோற்சவம்

மட்டக்களப்பு, கோட்டைமுனை, புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய இரதோற்சவம் இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனத்தின் துவஜாரோகணம் கடந்த 2ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகி இன்று வியாழக்கிழமை 9 மணியளவில் இரதோற்சவம் இடம்பெற்றது.

இந்நிலையில் தீர்தோற்சவமும் துவஜாவரோகணமும் நாளை வெள்ளிக்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை இடம்பெறவுள்ளது.

மேலும் மணவாளக்கோலம் சங்காபிஷேகம் நாளை மறு தினம் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இதன்போது பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க