
மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் பட்டத் திருவிழா
தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபை பட்டத் திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் 15.04.2025 செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணி தொடக்கம் கல்லடிக் கடற்கரையில் இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டியில் தனியாகவும் குழுவாகவும் பங்குபற்றலாம். பங்குபற்ற விரும்புபவர்கள் 12.04.2025 சனிக்கிழமைக்கு முன்னர் மட்டக்களப்பு மாநகர சபையின் நானாவித வருமானப் பிரிவுடன் 0752647377 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும் என மாநகர சபை அறிவித்துள்ளது.
புத்தாக்கம், கலை நயம், பிரமாண்டம் மற்றும் எமது பிரதேசத்தின் பாரம்பரியங்கள் என்பவற்றை பிரதிபலிக்கும் வகையிலமைந்த கருப்பொருளின் அடிப்படையில் உருவாக்கப்படும் பட்டங்கள் கருத்திற் கொள்ளப்பட்டு தெரிவுகள் இடம்பெறும் எனவும் தெரிவித்தனர்.
போட்டியில் பங்குபற்றி வெற்றி பெறுபவர்களுக்கு முதலாம் பரிசு – 100,000.00 இரண்டாம் பரிசு – 50,000.00, மூன்றாம் பரிசு – 25,000.00 வழங்கப்படவுள்ளமை குறிப்பிட தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்