
மட்டக்களப்பு ஏறாவூரில் போதைப்பொருள் வியாபாரி கைது
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆற்றங்கரை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பழைய இரும்பு கடை உரிமையாளரான 44 வயதுடையவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித்த லீலாரத்தினவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவதினமான இன்று அதிகாலை 01.30 மணியளவில் ஆற்றங்கரை பகுதியில் உள்ள பழயை இரும்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதன் போது அங்கு போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடை முதலாளியை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 27 கிராம் ஜஸ் போதை பொருளை மீட்டுள்ளனர்.
குறித்த நபர் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்