பாசிக்குடா கடலில் மூழ்கி சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்

மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த கரிசன் ஓ (வயது – 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட குறித்த நபர் சம்பவதினமான இன்று காலை பாசிக்குடா கடலில் நீராடிய போது கடலில்மூழ்கி தத்தளித்ததை அவதானித்த கடற்படையினர் உடனடியாக செயற்பட்டு அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.