மட்டக்களப்பில் உயிர் இழந்த நிலையில் மீட்கப்பட்ட யானை

மட்டக்களப்பு போரதீவுபற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்டதும்  வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்கள பிரிவிற்குரிய திக்கோடையில் உள்ள வாய்க்கால் ஒன்றினுள் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்படுகிறது.

20-25 வயது மதிக்கதக்க ஆண் யானையே இவ்வாறு உயிர் இழந்துள்ளது.

வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில் காட்டுயானைகள் அட்டாகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் முறையான பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படாமல் காணப்படுவதனால் யானைகளும் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விடயங்களை வெல்லாவெளி வன ஜீவராசிகள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்