மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி பிரதேசத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால்,சிறு குளங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
வெல்லாவெளி பிரதேசத்தில் சிறு குளங்களிலும் , நீர்நிலைகளிலும் முதலைகள் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக போரதீவு பற்று பிரதேச செயலகத்திற்கு முன் பக்கம் காணப்படும் நீர்நிலைகளில் 07 முதலைகள் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
வெல்லாவெளி , மண்டூர் பிரதேசம் மழை காலங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் , வீதிகளிலும் , குடியிருப்புகளை அண்டிய சூழலிலும் முதலைகள் நடமாட்டம் அதிகரிப்பினால் இரவு வேளைகளில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.