மகாஜனக் கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கி வைப்பு

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சனிக்கிழமை வெளியாகி இருந்தன.

இந்நிலையில் க.பொ.த (உயர்தரப்) பரீட்சை கலைப்பிரிவில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மாணவி மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதேவேளை மட்/மகாஜனக் கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகள் இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலை வழாகத்தில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அதிபர் சாந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 22 மாணவிகளுக்கும் பழையமாணவர்கள் சங்கத்தினால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். ரவிராஜா கலந்துகொண்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்