போராட்டங்கள் நடத்தப்படுவதால் எவ்வித பயனுமில்லை – முத்தையா முரளிதரன்

போராட்டங்கள் நடத்தப்படுவதால் எவ்வித பயனுமில்லை என இலங்கை அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

போராட்டங்கள் இடம்பெறுவதனால், சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வரமாட்டார்கள், இதனால்  வருமான இழப்பு ஏற்படும், என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றில் இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அதனைக் கைவிட்டால், சுற்றுலாப் பயணிகள் வருவதன்மூலம், நாட்டுக்கு வருமான அதிகரிப்பு ஏற்படும்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சி செய்தாலும் அல்லது எதிர்க்கட்சி ஆட்சி அமைத்தாலும், இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும், என முத்தையா முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க