
போதைப்பொருளுடன் அறுவர் கைது
ஐஸ் மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருளை கடத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ், அறுவர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 42 கிலோ 334 கிராம் ஐஸும், 77 கிலோ 484 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
தெவிநுவரவில் கடற்படையினரால் ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே, போதைப்பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.