
பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கொழும்பு – சிலாபம் வீதியில் தன்டுகம விமானப்படை வீதித் தடைக்கு அருகில் அரச பேருந்தில் பயணித்த பெண் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சீதுவை பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த குறித்த பேருந்தின் மிதி பலகையில் இருந்து பெண்ணொருவரும் ஆணும் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலன் இன்றி இன்று செவ்வாய் கிழமை உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.