
பெருமளவிலான கஞ்சா மீட்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – காரைநகரில் நூறு கிலோ கிராமிற்கு மேற்பட்ட கேரளா கஞ்சா, இன்று திங்கட்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 101 கிலோ 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்