பெயர் பலகைகள் அகற்றல்: ஊரை அடையாளம் காண்பதில் சிரமம் என சுற்றுலாத்துறை தெரிவிப்பு

-அம்பாறை நிருபர்-

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட பெயர் பலகைகள் பல அகற்றப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை சாய்ந்தமருது மாவடிப்பள்ளி காரைதீவு உள்ளிட்ட சில பகுதிகளின் பெயர் பலகைகள் இவ்வாறு அகற்றப்பட்டுள்ளன.

மேற்படி பெயர் பலகைகள் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.

பெயர் பலகைகள் திடிரென அகற்றப்பட்ட போதிலும் தற்காலிகமான எந்தவொரு ஏற்பாடும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் வெளியிடங்களில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்