
பெயர் என்ன வைக்கலாம் நூல் வெளியீடு
ஆசிரியரும் இலக்கிய ஆர்வலரும் கவிஞருமான ஏறாவூர் தாஹிர் எனும் புனைப்பெயர் கொண்ட எஸ்.எச். அஹமத் லெப்பையின் “பெயர் என்ன வைக்கலாம்” எனும் நான்காவது கவிதை நூல் வெளியீடு நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது.
ஏறாவூர் அறபா வித்தியாலத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளரும் ஏறாவூர் “இனசமதி” கலை இலக்கிய நூலின் ஆலோசனை ஏற்பாட்டாளருமான எஸ். எல். எம். ஹனிபா, காத்தான்குடி பிரதேச செயலாளர் வி. நிஹாறா, வாழைச்சேனை மத்திய பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா, எழுத்தாளரும் கலை இலக்கியவாதியுமான வைத்திய அத்தியட்சகர் ஜலீலா முஸம்மில், மட்டக்களப்பு மத்திய கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். முபாஸ்தீன் ஏறாவூர் ஸுஹதாக்கள் பேரவையின் தலைவரும் ஏறாவூர் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளருமான எம்.எல். அப்துல் லத்தீப் உட்பட இன்னும் பல இலக்கிய ஆர்வலர்களும் முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
Beta feature