புத்தாண்டு கொண்டாட்டத்தால் பறிபோன இளைஞனின் உயிர்!

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அருந்திய பானத்தால் ஒவ்வாமை ஏற்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹதுடுவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இளைஞர் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பர்களுடன் பட்டாசுகளை வெடித்து புத்தாண்டைக் கொண்டாடியுள்ளார்.

அப்போது, ​​இரு இளைஞர்கள் அருந்திய பானத்தால் ஒவ்வாமை ஏற்பட்டது.

குறித்த இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் இன்றையதினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.