
புதிய திருத்தந்தையை தேர்ந்தெடுப்பதற்கான மாநாட்டில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை!
புதிய திருத்தந்தையை தேர்ந்தெடுப்பதற்கான மாநாட்டை எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்க ரோமில் உள்ள கர்தினால்கள் இணக்கம் தெரிவித்ததாக வத்திக்கான் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
இன்று காலை வத்திக்கானின் சினோட் மண்டபத்தில் நடைபெற்ற ஐந்தாவது பொது சபைக் கூட்டத்தில் கர்தினால்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
இந்த மாநாடு வத்திக்கானின் சிஸ்டைன் பேராலயத்தில் நடைபெறும் என்பதோடு அதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.