புதிய கல்வியாண்டில் மாணவர்களுக்கான சீருடை விநியோகம் ஆரம்பம்
2025 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாவதுடன் அதே வாரமே இலவச சீருடை விநியோகமும் ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இலவச சீருடை விநியோகம் தொடர்பான நடைமுறை விதிகள் தொடர்பான சுற்றறிக்கை சகல பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலவச சீருடைகள் வலய, கோட்டக் கல்வி அதிகாரிகளால் பாடசாலை அதிபர்களுக்கு கையளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 10,000 க்கு மேற்பட்ட பாடசாலைகளில் 40 இலட்சம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களுக்கான சீருடைத்துணிகள் முழுவதையும் சீனா இலவசமாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்