பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பிரசன்ன ரணவீரவை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மேலும், பிரசன்ன ரணவீர பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று நீண்ட காலமாக தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர இன்றைய தினம் மஹர நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்