பிரசன்னா மணி எக்ஸ்சேஞ்ச் அனுமதிப்பத்திரம் ரத்து

வெள்ளவத்தையின் புகழ்பெற்ற பிரசன்னா மணி எக்ஸ்சேஞ்ச் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பணப்பரிவர்த்தனைக்கான அனுமதிப்பத்திரத்தை இலங்கை மத்திய வங்கி இடைநிறுத்தியுள்ளது.

அதிக மாற்று விகிதங்களை வழங்குவதாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் அன்னிய செலாவணி திணைக்களம் 30.03.2022 அன்று பிரசன்னா மணி எக்ஸ்சேஞ்ச் (பிரைவேட்) லிமிடெட் தொடர்பில் விசாரணையை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க