பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு!

நுவரெலியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண்புரை சத்திரசிகிச்சையில் பயன்படுத்தப்பட்ட தரக்குறைவான மருந்துகளால் பார்வை இழந்த 17 நோயாளர்களுக்கு   இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த மருந்து இறக்குமதிக்கு காரணமான அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்