பாரவூர்தி ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 71 பேர் உயிரிழப்பு

தெற்கு எத்தியோப்பியாவில் பாரவூர்தி ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் 68 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஐந்து பேர் ஆபத்தான நிலையில் போனா (Bona) வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

பாரவூர்தியில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்றமையே விபத்துக்குக் காரணம் என அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்