பாண் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உணவு அருந்திக்கொண்டு இருந்த நபர் திடீரென சுகவீனமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில்  உரும்பிராய் வடக்குஇ உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த காசிப்பிள்ளை குவேந்திரன் (வயது 62) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மதிய உணவாக பாண் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவேளை அவருக்கு மூச்சு விட சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

ஆஸ்துமா காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.