பாடசாலை உபகரணங்களுக்கான வற் வரியை நீக்கக்கோரி கடிதம்!
பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை நீக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நிதியமைச்சிடம் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளது.
இது தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் சந்தரஜித் தெரிவிக்கையில்,
கடந்த சில நாட்களாக சந்தையில், பாடசாலை உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகப் பெற்றோர் குறிப்பிடுகின்றனர்.
பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை நீக்குவதற்கான கடிதம் ஒன்று இன்று நிதியமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கம் பாடசாலை உபகரணங்களுக்கும் 18 சதவீத வற் வரி விதித்தது.
குறித்த வரி நீக்கப்பட வேண்டும். அதற்காகவே நாம் இன்று கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளோம்.
தற்போதைய அரசாங்கம் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்தது போல, குறித்த வற் வரி நீக்கப்பட வேண்டும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் சந்தரஜித் வலியுறுத்தியுள்ளார்.