பாகிஸ்தான், பஞ்சாப்பில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு அறிவிப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், திட்டமிட்டப்படி பரீட்சைகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கராச்சி விமான நிலையத்திலிருந்து அனைத்து விமான சேவைகளையும் நள்ளிரவு வரை நிறுத்தி வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான் நேரப்படி மாலை 6 மணிவரை மாத்திரமே விமான சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்தநிலையில், அங்கு நிலவும் பதற்ற நிலையைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு வரை விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்