பாகிஸ்தானின், லாகூர் செல்லும் இலங்கை விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பாகிஸ்தானின், லாகூர் செல்லும் இலங்கை விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்து வரும் போரின் காரணமாகவே இலங்கை விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின், கராச்சிக்கு செல்லும் விமானங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என சிறிலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவுக்கு செல்லும் விமானங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என சிறிலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்