பள்ளிகளில் இனி AI தொழில் நுட்ப பாடம் கட்டாயம்.. முதன்முறையாக நடைமுறைப்படுத்தும் நாடு இதுதான்

செயற்க நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Intelligence)எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தை பள்ளி பாடங்களில் ஒரு நாடு கட்டாயமாக்கி உள்ளது. அதற்கு அந்த நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. அடுத்து வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் ஏஐ தொழில்நுட்ப படிப்பு கட்டாயமாக்கப்பட உள்ளது.

உலகம் முழுவதும் தொழில்நுட்பம் பரவலாக்கப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பம் இடம்பெறாத துறைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து துறைகளிலும் இதன் மூலம் ஏராளமான வேலைகள் சுலபடுத்தப்படுகின்றன. மேலும், உலகளாவிய போட்டியை சமாளிப்பதற்கு ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழலில் அனைத்து நாடுகளும் இருக்கின்றன.

இந்தியாவிலும் இந்த தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வை அரசு பல்வேறு தளங்களில் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரக(UAE) நாட்டில் வரும் கல்வி ஆண்டு முதல் ஏஐ தொழில்நுட்ப பாடம் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதற்கு அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது குறித்த அறிவிப்பை துணை அதிபரும் அமீரகத்தின் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் அவர், ”ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டகால திட்டங்களில் ஒன்றாக வருங்கால தலைமுறையை அதிக திறமை மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்பதில் அரசு உறுதி கொண்டுள்ளது.

அதற்காக அமீரகத்தில் உள்ள கிண்டர் கார்டன் முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் வரும் கல்வி ஆண்டு முதல் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்ப பாடம் கட்டாயமாக்கப்படும். இதற்காக துறை மேற்கொண்டுள்ள மிக கடுமையான முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிகளில் இனி AI தொழில் நுட்ப பாடம் கட்டாயம்.. முதன்முறையாக நடைமுறைப்படுத்தும் நாடு இதுதா

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்