
பதவி விலகினார் லிட்ரோ நிறுவனத் தலைவர்
நாட்டில் நிலவும் எரிவாயு தொடர்பான நெருக்கடி நிலைமையினால், லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
நாட்டில் நிலவும் எரிவாயு தொடர்பான நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு தான் பதவி விலகுவதாக தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.