பண்டிகை தினத்தில் விபத்து: இளைஞன் பலி
வவுனியா – கோவில்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் யாழ்ப்பாணம் அராலி பகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் (வயது – 22) என்ற இளைஞரே பலியாகியுள்ளார்.
கோவில்குளம் பகுதியில் நேற்றையதினம் இரவு குறித்த இளைஞர் மற்றொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.