
பஞ்சாப் கிங்ஸ் 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது.
பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பிரப்சிம்ரன் சிங் 91 ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
237 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபடியாக ஆயுஷ் படோனி 74 ஓட்டங்களையும் அப்துல் சமத் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்