நேபாளத்தில் 4.8 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு!

நேபாளத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3:59 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

10 கிலோமீற்றர் ஆழத்தில் 4.8 மெக்னிடியூட் அளவில் இந்நில அதிர்வு பதிவானதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு நேபாளத்தில் 7.8 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் நில அதிர்வுகளால் சுமார் 9,000 பேர் வரையில் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.