நீதிமன்றத்தில் பணியாற்றும் யுவதியுடன் தவறாக நடக்க முற்பட்ட நபர் கைது!

-யாழ் நிருபர்-

மல்லாகம் நீதிமன்றத்திற்குள், யுவதியுடன் தவறான நடக்க முற்பட்ட நபர் ஒருவர் இன்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்றத்தில் கடமை புரியும் 48 வயதுடைய திருமணமாகாத குறித்த நபர், நீதிமன்றத்தில் வேலை செய்யும் 28 வயது யுவதியுடன் தொடர்ச்சியாக சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத குறித்த யுவதி, இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த சந்தேகநபரை, இன்றையதினம் விசாரணைகளுக்கு அழைத்த சுன்னாகம் பொலிஸார், விசாரணைகளின் பின்னர் கைது செய்தனர்.

குற்றம் நிகழ்ந்த இடம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குள் உள்ளடங்குவதால், சந்தேகநபர் தெல்லிப்பழை பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டார்.

அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க