நிமோனியாவால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நிமோனியா தொற்று காரணமாக நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியைச் சேர்ந்த யுவானிஸ் நேசராசா (வயது – 42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கடந்த 30ஆம் திகதி முதல் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 3ஆம் திகதி இரவு திடீரென உடல்நிலை மோசமடைந்ததால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
நிமோனியா தொற்று ஏற்பட்டதால் இவர் உயிரிழந்ததாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்